கோவிட் காலத்தில் சூட்டு காயங்களுக்கு இலக்காகும் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வு
கோவிட் பெருந்தொற்று காலப் பகுதியில் சூட்டுக் காயங்களுக்கு இலக்காகும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போதைய கோவிட் காலப் பகுதியில் சூட்டு காயங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக பிளஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் சத்தீஸ் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
வெப்பமான திரவங்கள் குறிப்பாக சூடு நீர் காரணமாக ஏற்பட்ட சூட்டுக் காயங்களினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் பெருந்தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் நீராவிப் பிடிப்பதனால் இவ்வாறான விபத்துக்கள் அதிகம் பதிவாகின்றது என தெரிவித்துள்ளார்.
நீராவி பிடிப்பதனால் கோவிட் தொற்றுவதனை தவிர்க்க முடியும் என இதுவரையில் நிரூபணம் செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் தடிமனை நீராவி கட்டுப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
நீராவி பிடிக்கும் போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.





அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படும் மாற்றம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை News Lankasri

வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ Cineulagam

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
