யாழில் தவறான முடிவுகளை எடுத்து மரணிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தவறான முடிவு எடுத்து உயிர் மாய்ப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரையில் 54 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தகவலை நேற்றைய தினம் (30.04.2023) யாழ். மாவட்ட பொலிஸ் பிராந்திய அத்தியட்சகர் டபிள்யூ.ஏ.ஜகத் விசாந்த மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய அத்தியட்சகர் எம் டபிள்யூ சந்தனகமகே ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்புக்கள்
யாழ். மாவட்டத்தில் கடந்த ஆண்டு 175 பேர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளனர். இவர்களில் 9 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.
166 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 116 பேரும், யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்தில் 59 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரையில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 2 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். 42 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 39 பேரும், யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்தில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, தவறான முடிவு எடுத்து உயிரிழக்க முற்பட்டவேளை காப்பாற்றப்பட்ட சுமார் 50 பேர் வரையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்த ஆண்டு சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
தவறான முடிவு எடுத்து உயிரிழக்க முற்படுவது தண்டனைக்குரிய குற்றம் என்று பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
