இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்களின் அளவு 2024 ஜூன் மாதத்தில் 4.3% சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
குறித்த அதிகரிப்பு 5.64 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருடத்தின் கடந்த மே மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 5.41 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்நியச்செலாவணி
அதன்படி, உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி கையிருப்பு, ஜூன் மாதத்தில் 4.3% வீதமாக அதிகரித்துள்ளது.
நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனா (China) வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் இதில் உள்ளடங்குவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இவை சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமானதாகும் எனவும், அவை பயன்பாட்டின் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை என்றும் இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam