வருமான வரி அறவீடு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
வருமான வரி அறவீடு தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
12 லட்சம் ரூபாவிற்கு மேல் வருட வருமானத்தை ஈட்டுவோர் வருமான வரி செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகர்கள், வாடகை வருமானம் ஈட்டுவோர், முதலீடுகளின் மூலமான வட்டி ஊடாக வருமானம் ஈட்டுவோர் அல்லது தொழில் மூலம் சம்பளம் பெறுவோர் உள்ளிட்ட தரப்பினர் இவ்வாறு வரி செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்த வேண்டியது மக்களின் கடப்பாடு என அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிய நேரத்தில் உரிய தொகை வருமான வரியை செலுத்துமாறு தேசிய இறைவரித் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
இணைய வழியிலோ அல்லது இறைவரித் திணைக்களத்தின் தலைமைக் காரியாலயம் அல்லது கிளை காரியாலயங்கள் ஊடாகவும் வரி செலுத்துகை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு விழுந்த பேரிடி... இந்தியாவால் கடும் பாதிப்பில் காரீஃப் பயிர்கள் News Lankasri

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம் News Lankasri
