தொடரும் சீரற்ற காலநிலை: சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு
நாட்டில் பல்வேறு பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மலையகப்பகுதிகளுக்கு செல்லும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதி, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி மற்றும் பதுளை - கொழும்பு பிரதான வீதிகளில் அதிக பனிமூட்டம் நிலவுவதாகவும் இதனால் இந்த வீதிகளில் செல்லும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் குறிப்பிட்டுள்ளனர்.
மகிழுந்து விபத்து
குறித்த வீதிகளில் மண்சரிவு நிலவும் அபாயம் காணப்படுவதன் காரணமாக சாரதிகள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

இதேவேளை ஹட்டன் - கொட்டகலை வீதியில் அதிக வேகத்துடன் பயணித்த மகிழுந்து ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்றும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.
டிக்கோயா பகுதியிலிருந்து சென்ற மகிழுந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும் மகிழுந்தில் சாரதி மாத்திரமே பயணித்துள்ளார் என்பதோடு அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri