முப்படையினருக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு குறித்து பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவிப்பு
விசேட பிரமுகர்களின் பாதுகாப்புக்காக கடமையில் ஈடுபட்ட முப்படையினருக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் குறித்து பாதுகாப்பு அமைச்சு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு செப்டெம்பர் 22 ஆம் திகதிவரை விசேட பிரமுகர்களின் பாதுகாப்புக்காக கடமையில் ஈடுபட்டவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு, முப்படை தளபதிகளுக்கு எழுதிய கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக் கடமை
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “முன்னாள் பிரமுகர்களின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்ட முப்படையினரும் 2024 செப்டெம்பர் 22ஆம் திகதிக்கு பின்னர் உயரதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடமாட்டார்கள் என பாதுகாப்பு அமைச்சு முப்படைகளின் தளபதிகளுக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தது.
அவ்வாறு செப்டெம்பர் 22ஆம் திகதிக்கு பிறகு எந்தக் கடமையிலும் ஈடுபடாதவர்களுக்கு அந்த கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முப்படை தளபதிகளுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படுவது நிறுத்தப்படவில்லை” எனவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
