யாழ்.தெல்லிப்பழை தள வைத்தியசாலையில் நோய்த் தடுப்பு சிகிச்சை விடுதி திறந்துவைப்பு
யாழ்.தெல்லிப்பழை தள வைத்தியசாலையில் "அரவணன்" நோய்த்தடுப்பு சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் பிரதம விருந்தினராக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த் கலந்து கொண்டு விடுதியினை திறந்து வைத்துள்ளார்.
முதற்கட்டமாக அமைக்கப்பட்ட விடுதி
கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீபவானந்தராஜா, அவுஸ்திரேலியா பாலம் அமைப்பின் பணிபபாளர்களான பிரணவன், வைத்தியர்கள், ஊழியர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

அவுஸ்திரேலியாவின், மனிதநேயத்திற்கான பாலம் (bridge to humunity )எனும் அமைப்பின் ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர் 150,000செலவில்( 03 கோடி ) முதற்கட்டமாக அமைக்கப்பட்ட இந்த விடுதி நோயாளர்கள் இறப்பிற்கு முன் தமது இறுதிக்காலத்தினை மருத்துவ உதவியுடன் கழிப்பதற்காக இது ிறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவர்களின் பரிந்துரையுடன் யாழ்.மாவட்டத்தின் எங்குள்ளவர்களும் இவ்வசதியை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






