பேலியகொட படுகொலை பின்னணியில் கஞ்சிபாணி இம்ரானின் குழு!

Sri Lanka Police Gampaha Sri Lanka Sri Lanka Police Investigation
By Dharu Aug 20, 2025 08:49 AM GMT
Report

பேலியகொட மீன் சந்தையைச் சுற்றி பதற்றத்தை ஏற்படுத்திய, பாதாள உலகக் கும்பல் தலைவர் பழனி ரெமோஷனின் நிதி ஒப்பந்தத்தின் பேரில், ஞானரத்ன மாவத்தையில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது, பிரபு' என்ற நபர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதாள உலகக் கொலையாளிகள் இருவர் 'பிரபு' என்ற நபரைச் சுட்டுக் கொன்றதோடு, மற்றொருவரை பலத்த காயப்படுத்தி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (19) காலை 8.30 மணியளவில் நடந்த இந்த தாக்குதலின் இலக்கு, பாதாள உலகத் தலைவர் புகுடுகண்ணாவின் கும்பலின் நெருங்கிய சகா என்பது காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தென்னிலங்கையில் பெண் ஊழியர்கள் கழிப்பறைக்கு செல்வதை வீடியோ எடுத்த இளைஞன்

தென்னிலங்கையில் பெண் ஊழியர்கள் கழிப்பறைக்கு செல்வதை வீடியோ எடுத்த இளைஞன்

கஞ்சிபாணி இம்ரானின் குழு

புகுடுகண்ணாவின் பிரிவினருக்கும் பழனி ரிமோஷனின் பாதாள உலகக் கும்பலுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் பகை இந்த தாக்குதலுக்கு வழிவகுத்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதற்கு தேவையான வாடகை துப்பாக்கி ஏந்திய நபர்களை நியமித்து தாக்குதலை வழிநடத்தியது கஞ்சிபாணி இம்ரானின் குழுவாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பேலியகொட படுகொலை பின்னணியில் கஞ்சிபாணி இம்ரானின் குழு! | In The Peliyagoda Massacre Investigations

தாக்குதலில் கொல்லப்பட்ட பிரபு, 2022 ஆம் ஆண்டு வெல்லே சாரங்காவின் மைத்துனரின் கொலைக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

மேலும், மட்டக்குளிய, மோதரை மற்றும் பேலியகொட பகுதிகளில் பிரபு என்ற நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், இதற்கு முன்பு அவர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பொலிஸாரிடம் சிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

மோதரை பகுதியில் உள்ள ஒரு பெண்ணடன் இருந்த முரனான தொடர்பு காரணமாக அவர் முன்பு தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

அந்த தாக்குதலில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கோமாளிக் கூத்தாடும் அநுர தரப்பு தமிழ் எம்.பிக்கள்

கோமாளிக் கூத்தாடும் அநுர தரப்பு தமிழ் எம்.பிக்கள்

பாதாள உலகக் கும்பல்

இதன்பின்னர் பாதாள உலகக் கும்பல்களின் இலக்காக மாறிய 40 வயது பிரபு, பேலியகொட மீன் சந்தையில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்துள்ளார்.

நேற்று காலை 8.30 மணியளவில் மீன் சந்தைக்கு எதிரே உள்ள ஒரு கடையில் உணவு வாங்க வந்தபோது, துப்பாக்கிதாரிகளால் அவர் தாக்கப்பட்டார்.

பேலியகொட படுகொலை பின்னணியில் கஞ்சிபாணி இம்ரானின் குழு! | In The Peliyagoda Massacre Investigations

மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரர்கள், பிரபுவை T-56 துப்பாக்கியால் சுட்டதில், அவர் படுகாயமடைந்தார்.

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் மீன் சந்தை வளாகத்திற்கு முன்னால் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பேலியகொடையைச் சேர்ந்த ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.

தாக்குதல் நடந்த நேரத்தில் பேலியகொட பகுதியில் மின்சாரம் தடைப்பட்டதால், சிசிரீவி கருவிகள் இயங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனவே தாக்குதலின் எந்த காட்சிகளையும் பெற முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், நேற்று மதியம் பிரபு உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடனேயே, பேலியகொட குற்றப்பிரிவு இயக்குநர் ரோஹன் ஒலுகலா மற்றும் தலைமை பொலிஸ் ஆய்வாளர் லிண்டன் சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

தாக்குதல் நடந்த இடத்திலிருந்து பல வெற்று T-56 தோட்டா உறைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு அங்கு விழுந்த பல T-56 தோட்டா உறைகளை தாக்குதல்தாரி எடுத்துச் சென்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன்பின்னணியில் பொலிஸார் மற்றும் குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

மனைவியை மீட்டுத் தாருங்கள்.. மின்கம்பத்தில் ஏறிய நபரால் பரபரப்பு

மனைவியை மீட்டுத் தாருங்கள்.. மின்கம்பத்தில் ஏறிய நபரால் பரபரப்பு

கொழும்பில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்

கொழும்பில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US