வைத்தியசாலையில் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டுள்ள கோவிட்டால் உயிரிழந்தவரின் சடலம்
பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவரின் சடலம் 18 நாட்களாக வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 29ஆம் திகதி 71 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது சடலமே இவ்வாறு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் கடந்த ஒட்டோபர் மாதம் 9ஆம் திகதி பாணந்துறை பிரதேசத்தில் வாகன விபத்துக்குள்ளாகியுள்ளார்.
கடந்த 5 மாத காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த மாதம் 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது சடலத்திற்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பில் குடும்ப உறுப்பினர்களிடம் அறிவித்த போதிலும் இதுவரையில் ஒருவரும் வருகைத்தரவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமையினால் வைத்தியசாலை ஊழியர்கள் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
