யாழில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென கீழே விழுந்து மரணம்
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் மத்தி பகுதியில் சிறுவன் ஒருவன் இன்று விளையாடிக்கொண்டிருந்த வேளை கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் அவனது சகோதரனுடன் விளையாடிக்கொண்டிருந்த வேளை திடீரென கட்டடத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த சிறுவன் மூளாய் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் ஜெயச்சந்திரன் தஜிதரன் (வயது 11) என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

படம் இல்லை ரூ. 100 கோடிக்கு மேலான செலவில் அட்லீ இயக்கும் விளம்பரம்... பிரம்மாண்டத்தின் உச்சம் Cineulagam

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri
