மட்டக்களப்பு - அம்பாறை கத்தோலிக்க மறை மாவட்டத்திலுள்ள தேவாலயங்களில் கறுப்பு ஞாயிறு அனுஷ்டிப்பு இல்லை
கறுப்பு ஞாயிறு தினமானது மட்டக்களப்பு அம்பாறை கத்தோலிக்க மறை மாவட்டத்திலுள்ள கத்தோலிக்க ஆலயங்களில் அனுஷ்டிக்கப்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அதேவேளை வழமை போல தேவாலயங்களில் திருப்பலி பூஜைகள் இடம்பெற்றுள்ளதுடன், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் நேரடி தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வலியுறுத்தி கத்தோலிக்க சபை அறிவித்துள்ள ‘கறுப்பு ஞாயிறு’ தினம் இன்று நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் மட்டக்களப்பு, அம்பாறை கத்தோலிக்க மறை மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் இன்று கறுப்பு ஞாயிறு தினம் அனுஷ்டிக்கப்படவில்லை.
அதேவேளை குறித்த தேவாலயங்களில் வழமைபோல திருப்பலி பூஜைகள் இடம்பெற்றுள்ளதுடன், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பலத்த பாதுகாப்பினையும் வழங்கியுள்ளனர்.
இதேவேளை தமக்கு ஆலய பங்கு தந்தையான வண பிதாக்களோ அல்லது மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்ட ஆண்டகையே இது தொடர்பாக அறிவிக்கவில்லை எனப் பொதுமக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri