இலங்கையில் ஒரே வாரத்தில் 105 பேர் கோவிட் தொற்றால் மரணித்துள்ளனர்
இலங்கையில் கோவிட் தொற்றாளர்களின் மரண எண்ணிக்கை நேற்றைய தினத்தில் 801 ஆக அதிகரித்துள்ளதுடன் கடந்த வாரத்தில் மாத்திரம் 105 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 3 ஆம் திகதி வரை இலங்கையில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 700 ஆக இருந்ததுடன் கடந்த வாரத்தில் தினமும் 13, 11, 14, 11, 19, 22, 15 என மரணங்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கை முதலாவது கோவிட் தொற்றாளி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டதுடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை 100 மரணங்கள் சம்பவித்திருந்தன.
முதலாவது மரணத்தின் பின்னர் கடந்த 8 மாதங்களில் 200 வது மரணம் ஏற்பட்டது. இதனையடுத்து 300, 400 என ஒரு மாத காலத்திற்குள் மரணங்கள் ஏற்பட்டன.
300 வது மரணத்தில் இருந்து 400 வது மரணம் ஏற்பட 18 நாட்கள் சென்றன. 400 வது மரணத்தில் இருந்து 500 வது மரணம் ஏற்பட 21 நாட்கள் சென்றன.
500வது மரணம் ஏற்பட்டு ஒரு மாதமும் ஒரு வாரமும் கடந்த நிலையில் 600 வது மரணம் ஏற்பட்டது. அதன் பின்னர் 20 நாட்களுக்கு 700 வது மரணம் ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.