முன்பள்ளி ஆசிரியர்களுடன் இம்ரான் எம்.பி கலந்துரையாடல்
மூதுர் பாலர் பாடசாலை ஆசிரியர் குழுவினருடனான கலந்துரையாடல் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைைைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
குறித்த கலந்துரையாடல், நேற்று (2024.08.03) மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களினால் மூதூர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலில் சமகாலத்தில் மூதூர் முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், சவால்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் சுட்டி காட்டி எழுத்து மூலமான பல்வேறு கோரிக்கைகளையும் வருகை தந்த ஆசிரியர் குழுவினரினால் கையளிக்கப்பட்டது.
முன்னெடுப்புகள்
இவர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக இம்ரான் மஹ்ரூப்பால் அவரது மட்டத்தில் முடிக்க கூடிய வேலைத்திட்டங்களை உரிய அதிகாரிகளிடம் கலந்துரையாடி செயற்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் செய்து கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை ஆசிரியர் சங்கத்தின் (EPPTA) முகாமைத்துவப் பணிப்பாளர் அப்பாஸ் ஹிதாயத்துல்லா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |