மியன்மார் தலைவரின் நெருங்கிய உதவியாளருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை
தேசத்துரோக குற்றத்துக்காக மியன்மார் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகியின் நெருங்கிய உதவியாளரான 80 வயதைக்கொண்ட வின் ஹிடினுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
அத்துடன், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு இடம்பெற்று வரும் போராட்டங்களினால் இதுவரை 1,200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், ஆங்சாங் சூகியின் நெருங்கிய உதவியாளரான வின் ஹிடின் இராணுவத்தினரால் கடந்த பெப்ரவரியில் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து அவர் மீது நடத்தப்பட்டு வந்த விசாரணையை அடுத்து இன்று அவருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.