மத்தியின் நிகழ்ச்சி நிரல்கள் பிரதேச சபைகளில் திணிப்பு! வேலணை பிரதேச சபையில் சுட்டிக்காட்டு
மத்தியின் நிகழ்ச்சி நிரல்களை பிரதேச சபைகளில் முன்னெடுக்க சதித்திட்டம் நிகழ்ந்தேறி வருவதாக சுட்டிக்காட்டிய வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மத்தியின் சட்டத்தை பிடித்துக்கொண்டிராது மக்கள் நலன்களை முன்நிறுத்த மக்கள் பிரதிநிதிகளுடன் நெகிழ்வுடன் செயற்படுவது அவசியம் எனவும் வலியுறுத்தினர்.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபா மண்டபத்தில், தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுப்பதில் இருக்கின்ற இடர்பாடுகள் தொடர்பில் சபை உறுப்பினர்களால் விரிவாக ஆராயப்பட்டது.
மக்களின் அவிருத்தி
இதன்போது உறுப்பினர்கள் மேலும் கூறுகையில், பிரதேசத்தின் சுகாதார செயற்பாடுகளை முழுமையாக நிவர்த்தி செய்ய ஆளணிப் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுவது அவசியம்.
குறிப்பாக குறிகாட்டுவான் இறங்குதுறை பகுதியில் குடிநீர் பாதுகாப்பு, மலசலகூட மேம்பாடு உள்ளிட்டவை கட்டுமாணம் அல்லது மீள் திருத் செய்யப்படுவது அவசியம். இவ்வாறு இவற்றை முன்னெடுக்க நிதி வளம் அவசியம்.
பல திட்டங்களை முன்னெடுக்க பெரு நிதி தேவையாக இருக்கின்றது. ஆனால் எமது சபை நிதி விடயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருப்பதால் எடுத்த எடுப்பில் எல்லா அபிவிருத்தியையும் முன்னெடுப்பது சிக்கலானது.
அதேநேரம் நயினாதீவின் உட்கட்டுமான கட்டமைப்புக்களும் மக்களின் அவிருத்தியும் கட்டமைக்கப்பட்டு அதனை வலுவான சுற்றுலா தலமாக உருவாக்குவது அவசியம்.
மக்களின் சபைகளில் மக்களின் பிரதிநிதிகளுக்கும் தான் அதிகாரம் இருக்கின்றது. அந்த மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை நிறைவு செய்வதில் மத்தியின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்தே அரச அதிகாரிகள் செயற்பாடுகளை முன்னெடுக்க முயல்கின்றனர்.
கடந்த அரசு முன்னெடுத்த திட்டங்களை பூர்த்தி செய்துவிட்டு அதற்கு திறப்புவிழா செய்கின்றனர். அதற்கு இந்த அதிகாரிகள் குடைபிடிக்கின்றனர். அரச அதிகாரிகளின் சட்ட நடைமுறைக்கு ஏற்ப மக்கள் நலன்களை புறக்கணித்து செயற்பட்டால் மக்களுக்கான சபைகள் தேவையற்றது என்றும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.







16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
