கடந்த 8 மாதங்களில் வெகுவாக குறைந்த வாகனங்களின் இறக்குமதி
வாகனங்களை இறக்குமதி செய்வது வரையறுக்கப்பட்டதை அடுத்து கடந்த 8 மாத காலத்திற்குள் இரண்டு கார்கள் மற்றும் 27 பேருந்துகள் மாத்திரமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நீதியமைச்சின் அரச நிதி முகாமைத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் 227 மோட்டர்சைக்கிள்கள் மாத்திரமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 100 வீதம் குறைவான இறக்குமதி எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு 106 கார்கள், 3309 பேருந்துகள் மற்றும் 21203 மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.
2019ஆம் ஆண்டு 1060 முச்சக்கர வண்டிகள் இறக்குமதி செய்யப்பட்டன. கடந்த 2020ஆம் ஆண்டு முச்சக்கரவண்டிகள் எதுவும் இறக்குமதி செய்யப்படவில்லை.
அத்துடன் விவசாயம் சம்பந்தப்பட்ட வாகனங்களின் இறக்குமதி 52 வீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட 354 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு 233 வாகனங்கள் மாத்திரமே இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. மோட்டார் வாகன இறக்குமதியின் மூலம் கடந்த 2019ஆம் ஆண்டு 81.5 பில்லியன் ரூபாய் வரி வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.
இந்த தொகை கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 43.1 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளதாகவும் நிதி முகாமைத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam