பிரான்ஸில் இலங்கை தமிழ் மக்களுக்காக நிறைவேற்றப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பரிஸின் புறநகர் பகுதியிலுள்ள நகர சபையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்றி-சூர்- சென் (Ivry-sur-Seine) நகரசபையில் நேற்று முன்தினம் இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவான தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்றி-சூர்-சென் நகரசபை முதல்வர், நகரசபை பிரதி முதல்வர், நகரசபை உறுப்பினர்கள் போன்றோரின் ஆதரவுடன் குறித்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படுள்ளது
குறித்த தீர்மானத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை முன்னெடுக்கப்பட்டதாகவும், இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு தனித் தமிழீழம் தான் நிரந்தர அரசியல் தீர்வாக இருக்க முடியும் எனவும், இவை போன்ற பல்வேறு விடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வின் போது இலங்கை இராணுவத்தினரின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பரிஸில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் போது, இவ்றி-சூர்- சென், தமிழ் சங்கங்கள், இறுதிக்கட்ட போரின் போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் தலைவிதி பற்றி சுட்டிக்காட்டியுள்ளன.
போரின் போது தமிழ் மக்கள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தமை தெரியவந்துள்ளது. மேலும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்கள் தொடர்பிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளன.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 6 நிமிடங்கள் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri