வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு அந்நிறுவனம் வழங்கியுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு
உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு புதிய புதுப்பித்தல்களை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் ஒரே நேரத்தில் 100 புகைப்படங்களை அனுப்பும் வசதி வெகு விரைவில் வாட்ஸ்அப் தளத்தில் அறிமுகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெளிவான புகைப்படம் பகிர்தல்
வாட்ஸ்அப் செயலியை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது வாட்ஸ்அப் பயனர்கள் ஒரே நேரத்தில் 30 புகைப்படங்களை மட்டுமே அனுப்ப முடியும்.
இந்நிலையில், இந்த அறிவிப்பு பயனர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
ஆண்ட்ராய்டு 2.23.4.3 பீட்டா புதுப்பித்தலில் இது கிடைக்கிறதாம். மேலும், பயனர்கள் தங்கள் சாதனத்தில் எடுக்கின்ற அதே தெளிவான புகைப்படத்தை பகிர முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.