நாட்டு மக்களுக்கு ஓர் அவசர அறிவுறுத்தல் (VIDEO)

Sri Lanka Weather Kegalle Instructions
By Mayuri Nov 09, 2021 08:05 AM GMT
Report

கேகாலை, ரம்புக்கனை - தொம்பேமட பிரதேசத்தில் மண்சரிவில் 3 பேர் இன்று உயிரிழந்திருந்த நிலையில், மண்சரிவு தொடர்பில் நேற்றைய தினமே குறித்த குடும்பத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயத்தை கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

தொம்பேமட பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் தாயும், 8 மற்றும் 14 வயதுடைய இரு மகள்களும் உயிரிழந்துள்ள அதேவேளை தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் மண்சரிவு அபாய நிலை காணப்பட்ட நிலையில் அங்கிருந்த மக்களை குறித்த இடத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறி வேறு பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு நேற்று அறிவித்தல் வழங்கப்பட்டது.


அங்கிருந்து இரு குடும்பங்கள் வெளியேறிய நிலையில் மண்சரிவில் பாதிப்பிற்கு இலக்கான குடும்பம் அங்கிருந்து வெளியேற விருப்பம் தெரிவிக்கவில்லை.

குறித்த இடம் அபாயகரமான பகுதி என பல முறை அறிவுறுத்தல் வழங்கப்பட்ட போதும் அதனை ஏற்று அங்கிருந்து வெளியேறாத குடும்பத்தினரே சம்பவத்தில் பாதிப்பிற்கு இலக்காகியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகள் பதிவாகி வருகின்றன.

என்ற போதும் அனர்த்தங்கள் இடம்பெறுவதற்கு முன்னரே குறித்த பகுதிகளில் இருக்கும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், தேசிய கட்டடங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சி திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம் என்பன முன்னெச்சரிக்கைகளையும், சிவப்பு மற்றும் அபாய எச்சரிக்கைகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

மக்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த திணைக்களங்கள் செயற்பட்டு வருவதுடன் மக்களை பாதுகாப்பதற்கான சகலவித நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றன.

இதேவேளை நாட்டில் அனர்த்த நிலைமைகளில் சிக்கும் மக்களை மீட்பதற்காக மீட்பு குழுவினரும் தமது உயிரையும் கருத்தில் கொள்ளாது களப் பணிகளுக்காக களமிறங்கியுள்ளனர்.

அத்துடன், திடீரென அனர்த்தங்களை எதிர்கொள்ளும் கொள்ளும் மக்கள் விரைவாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தை தொடர்பு கொள்ளும் வகையில் 117 என்ற தொலைபேசி இலக்கமொன்றும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மக்களாகிய நம் ஒவ்வொருவருக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவோரின் அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகளை பின்பற்றி அதற்கேற்றாற் போல் செயற்பட வேண்டியது நாட்டு பிரஜைகளாகிய அனைவரதும் கடமையாகும்.

என்ற போதும் அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகளை பின்பற்றாது எமது உயிரை நாமே அபாய நிலைக்கு உட்படுத்துவது மிகவும் தவறான விடயம் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 

எனவே தயவு செய்து வழிகாட்டல்களையும் அறிவுறுத்தல்களையும் பின்பற்றி, ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றி கொள்வதற்கு தேவையான மிகச் சிறிய வழிகாட்டலையும் கூட மிகவும் அர்ப்பணிப்புடன் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறோம். 

மேலும் அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் ஊடகங்களில் உடனுக்குடன் வெளியிடப்படும் நிலையில் தொடர்ச்சியாக செய்திகளை பின்பற்றி வருவது மேலும் சிறந்தது. 

மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US