வடக்கு - கிழக்கில் சிகையலங்காரம் செய்பவர்களை விமர்சித்தால் உரிய நடவடிக்கை.. முன்வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
வடக்கு - கிழக்கு மாகாணத்தில் சிகையலங்காரத்தில் ஈடுபடுகின்றவர்களை சமூக ரீதியாக பாகுபாடு காட்டி, அவர்களது மனங்களை புண்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்தால் அவற்றுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண அழகக கூட்டுறவு சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஆனந்தராசா உதயசங்கர் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(17.04.2026) யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஞாயிற்றுகிழமைகளில் விடுமுறை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள அழகக சம்மேளனங்களை இணைப்பது குறித்து கடந்த காலங்களில் ஆய்வு செய்யப்பட்டு பின்னர் அது கைவிடப்பட்டது. அதனை இணைப்பதன் தேவையை தற்போது உணர்கிறோம்.
ஆகையால் அது குறித்து பரிசீலித்து வருகிறோம். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் கட்சி சார்ந்த ஒருவர் சிகையலங்கார நிலையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்க கூடாது என்றும், வேறு ஒரு தினத்தில் விடுமுறையை வழங்க முடியாதா? ஏனையோரும் குறித்த தொழிலை பழகி செய்தல் வேண்டும் என்று கூறியுள்ளார்.

சிகையலங்கார தொழிலை யாரும் பழகி, முறைப்படி அனுமதி பெற்று செய்யலாம். அதனை நாங்கள் கடந்தகாலம் தொட்டு கூறி வருகிறோம். நாங்கள் அதற்கு எதிர்ப்பானவர்கள் அல்ல. ஞாயிற்றுக்கிழமை என்பது பொதுவான ஒரு விடுமுறை தினம்.
ஆகையால் சிகையலங்காரம் செய்பவர்களுக்கும் ஒரு ஓய்வு தேவை என்பதால் அந்த விடுமுறையை எமது அமைப்பு நடைமுறைப்படுத்துகிறது.அது எதிர்காலத்திலும் நடைமுறைப்படுத்தப்படும்.
கட்டணம் அதிகரிப்பு
கொரோனாவுக்கு பின்னர் கடந்த 2025 ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் தான் கட்டணமானது எமது தொழிற் சங்கத்தால் அதிகரிக்கப்பட்டது. கடந்த காலங்களில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கட்டணங்களை புதுப்பித்து நடைமுறைப்படுத்தி வருகிறோம். கடந்த காலங்களில் கட்டணம் அதிகரித்தமை தொடர்பாக உள்ளூராட்சி சபைகள், ஆளுநர் செயலகம், மாவட்ட செயலகம் ஆகியன கடுமையான நெருக்கடிகளை கொடுத்தன.
நடைமுறை செலவுகளுக்கு அமைவாகவே நாங்கள் குறித்த காலப்பகுதிக்கு ஒருமுறை கட்டண அதிகரிப்பு செய்து வருகிறோம். மாணவர்களது சிகையலங்காரம் குறித்து நாங்கள் அதிக கரிசினை செலுத்தி வருகிறோம். குறித்த விடயத்தால் எமது தொழிலாளர்களும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.

எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு சிகை அலங்காரம் செய்கின்ற பொழுது பாடசாலைகள் சில விடயங்களை செய்யலாம் என்பது தொடர்பாக நமது முன்மொழிவை முன்வைக்கின்றோம்.
மாணவர்களுக்கான சிகை அலங்காரம் பதிவு செய்யும் அட்டை
மாணவர்களுக்கு ஒரு அட்டையினை வழங்குவதன் மூலம், அந்த அட்டையில் சிகையலங்காரம் செய்கின்ற இடங்களை பதிவு செய்ய கோரி, மாணவர்கள் எங்கே சிகை அலங்காரம் செய்கின்றார்கள் என்பதனை கணித்துக் கொள்ளலாம்.
அதுபோன்று எதிர்காலத்தில் மாணவர்களுக்கு எவ்வாறு சிகை அலங்காரம் செய்ய வேண்டும் என்ற ஒரு மாதிரி படத்தை முன்மொழிந்து, அதற்கு அமைவாக சிகை அலங்காரம் செய்பவர்களுக்கு கட்டணத்தை குறைப்பதற்கு நாங்கள் தீர்மானித்து இருக்கின்றோம்.

அந்த வகையில் குறித்த முன்மொழிவுக்கு அமைவாக சிகை அலங்காரம் செய்பவர்களுக்கு வடக்கு மாகாணம் முழுவதும் 350 அளவிடப்படும் என தீர்மானித்திருக்கின்றோம்.
சிகையலங்காரத்தில் ஈடுபடுகின்றவர்களை சமூக ரீதியாக பாகுபாடு காட்டி, அவர்களது மனங்களை புண்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்தால் அவற்றுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டி ஏற்படும் என்றார்.
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam