பல இலட்சம் பெறுமதியான சிகரெட்டுக்களை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சி.. பொலிஸாரின் தீவிர நடவடிக்கை
இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்த ரூ. 91 லட்சம் மதிப்பிலான 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் அவற்றை கடத்த பயன்படுத்திய வாகனம் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை மெரைன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (18.04.2026) புதுமடம் கடற்கரை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
7 லட்சம் பெறுமதியான சிகரெட்டுக்கள் மீட்பு
இன்று அதிகாலை, இலங்கைக்கு கடல் வழியாக கடத்தல் பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மெரைன் பொலிஸாரும் கீழக்கரை சுங்கத்துறை அதிகாரிகளும் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஒரு வாகனத்தில் இருந்து மூட்டைகளை இறக்கி கடற்கரையில் பதுக்கி வைத்துக் கொண்டிருந்ததை கவனித்த பொலிஸார், சந்தேகநபர்களை பிடிக்க முயன்றனர்.
இதன்போது சிலர் தப்பி ஓடிய நிலையில், ஒருவரை மட்டும் கைது செய்ய முடிந்தது. அங்கிருந்த 35 மூட்டைகளை சோதனை செய்தபோது, அதில் 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
விசாரணையில் சிக்கிய நபர்
மேலும் விசாரணையில், இந்த சிகரெட்டுகள் இன்று அதிகாலை படகின் மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, புதுமடம் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்த முருகன் (38) என்பவரை கைது செய்த மெரைன் பொலிஸார், சிகரெட்டுகள் மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு ரூ. 91 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிலக்கரி விநியோகஸ்தரின் 9 பில்லியன் ரூபா முடக்கம்! மக்களுக்குப் பாதிப்பில்லை என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி