ஐரோப்பா நாடுகளின் விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு - உலக செய்திகளின் தொகுப்பு
ஜேர்மனி, பிரான்ஸ் உட்பட ஐரோப்பா நாடுகளில் விமான பயணச்சீட்டு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான பயண சீட்டுக்களை முன்பதிவு செய்யும் மக்கள், கட்டண அதிகரிப்பு குறித்து கவலையடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான அதிகரிப்பு நிலைமை எதிர்வரும் காலங்களில் தொடரும் என்று ஐரோப்பிய விமான சேவைகளின் உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் விலை உயர்வுக்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன. 2021ஆம் ஆண்டுடன் உடன் ஒப்பிடுகையில், பயண சீட்டுகளுக்கு, நடுத்தர தூர வணிக விமானத்திற்கு கட்டணங்கள் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
ஜெர்மனியில் இருந்து புறப்படும் விமானங்களின் பயணச்சீட்டு கட்டணங்கள் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியை விட 20.4 சதவீதம் உயர்ந்துள்ளது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri