பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்! முறையிடுவதற்கு புதிய இலக்கம் அறிமுகம்
போக்குவரத்து விதிமீறல்கள் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் மாகாண பேருந்து ஊழியர்களுக்கு எதிராக முறைப்பாடுகளை அளிக்க புதிய இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 071-2595555 என்ற புதிய இலக்கம் ஒன்றை போக்குவரத்து ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், குறித்த இலக்கத்திற்கு காணொளி பதிவுகளையும் அனுப்பி வைக்க முடியும்.
சமூக வலைத்தளங்களான வட்ஸ் அப், வைபர் மற்றும் இமோ மூலம் அந்த எண்ணுக்கு போக்குவரத்து விதிமீறல்கள் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் மாகாண பேருந்து ஊழியர்களுக்கு எதிராக காட்சிகளை பதிவு செய்து அனுப்புவதன் மூலம் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளரும் பேராசிரியருமான திலான் மிராண்டா தெரிவித்தார்.
மேலும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தொடர்பு இலக்க எண் 1955 தொடர்ந்து செயற்பாட்டில் இருப்பதாகவும் 071-2595555 எனும் புதிய எண் பொது மக்களுக்கு மேலும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri