கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானம்
இன்று (15) முதல் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரையில் அனைத்து தேர்தல் சட்டங்களும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பாரபட்சம் ஏற்படுத்தும் வகையில் வேட்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் மற்றும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான குற்றச்செயல்களை தடுக்க பொலிஸாருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் அனுமதி
ஒலிபெருக்கிகளை பயன்படுத்த பொலிஸாரின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும் எனவும், வாக்குகளைப் பெற இலஞ்சம் மற்றும் தேவையற்ற செல்வாக்கை பயன்படுத்துதல் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரச நிறுவனங்களையும், அரச அதிகாரிகளையும் தவறாக பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட் Cineulagam
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri