இலங்கை தமிழர்கள் குறித்து தமிழக சட்டசபையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்
இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்.எனவே அந்த சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் எனக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் மூலம், சட்டப்படியான சமத்துவம், சட்டப்படியான பாதுகாப்பை மத்திய அரசாங்கம் மறுக்க முடியாது.
அத்துடன் நாட்டுக்கு ஏதிலிகளாக வருவோரை மதரீதியாகப் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் சட்டம் உள்ளது.
எனவே இந்த சட்டத்தை மத்திய அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என்று, இது தொடர்பான யோசனையை முன்வைத்து உரையாற்றிய, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதநல்லிணக்கம், மதசார்பின்மை கோட்பாடுகளுக்கு, இந்த சட்டம் உகந்ததாக இல்லை. எனவே இந்திய நாட்டின் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று ஸ்டாலின் தமது உரையின் போது கோரிக்கை விடுத்தார்.
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam