நாட்டின் அந்நிய செலாவணி பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக நாட்டின் அந்நிய செலாவணி பற்றாக்குறை அதிகரித்துள்ளது.இதனால் பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய,பெருந்தோட்டத்துறை இலங்கையின் அந்நிய செலாவணி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில் தற்போது இலங்கை தேயிலையின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி செலவு அதிகரிப்பு

நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாகவே தேயிலையின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தேயிலையின் உற்பத்தி செலவு 30 தொடக்கம் 35 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக பெருந்தோட்டத் துறையின் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
| நாட்டின் அந்நிய செலாவணியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி |
இரசாயன பசளை

இரசாயன பசளை மீதான தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், பெருந்தோட்டங்கள் இரசாயன பாவனையை குறைத்துள்ளது. இதேவேளை உலகளாவிய ரீதியில் இரசாயன பசளைகளின் விலைகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக தமது உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ளதாக பெருந்தோட்டத் துறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பெருந்தோட்டத்துறை இலங்கையின் அந்நிய செலாவணி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri