எரிபொருள் விநியோகம் சீரின்மையால் இ.போ.ச ஊழியர்கள் பாதிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இ.போ.ச சாலையின் ஊழியர்கள் கடமைகளுக்குச் சரியான நேரத்திற்குச் செல்ல முடியவில்லை.
ஆகையால் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை உரிய முறையில் பெற்றுக்கொடுப்பதற்கு ஆவண செய்யுமாறு இலங்கை சுதந்திர ஊழியர் சங்க வடமாகாண இணைப்பாளர் ந.கோபி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
எமது சாலைகளுக்கு இன்று, நாளை எரிபொருட்களை வழங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றதே தவிர எவ்விதமான ஆக்க பூர்வமான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இதனால் அத்தியாவசிய சேவையை வழங்கும் நாங்கள் எரிபொருள்களை உரிய முறையில் பெற்றுக்கொண்டு சேவையை முன்னெடுக்க முடியவில்லை.
இதனால் தற்போது க.பொ.த சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் உட்பட அரச சேவையை மேற்கொள்ளும் உத்தியோகத்தர்கள் பலர் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே இதனை கருத்தில் கொண்டு இ.போ.ச சாலை உத்தியோகத்தகள் சாரதிகள், காப்பாளர்கள்
அனைவருக்கும் உரிய நேரத்திற்கு எரிபொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு
மேலும் தெரிவித்துள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 15 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam