மண்முனை தென்எருவில்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் உள்ள பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர், மண்முனை தென்எருவில்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.
களுவாஞ்சிகுடி பட்டிருப்பு தேசிய பாடசாலையில் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப்படையினர் என 150 பேருக்கு கோவிட் தடுப்பு ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,மேற்பார்வை பொதுச்சுகாதார
பரிசோதகர்கள், இராணுவத்தினர் என பல்வேறு தரப்பினரும் இந்த நிகழ்வில்
கலந்து கொண்டுள்ளனர்.