ஓட்டமாவடி சுகாதார அலுவலகத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆயிரம் நபர்களுக்குத் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரனின் வழிகாட்டலில் நடைபெற்றுள்ளது.
அந்த வகையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று கோவிட்- 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர்கள் சபையின் செயலாளர் மற்றும் சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் சுகாதாரத் துறையினர் ஆகியோருக்கு கோவிட்- 19 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
கோவிட்- 19 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்
ஏ.எல்.நௌபர் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக
உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பதினான்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம்
ஊடாக கோவிட்- 19 தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.