2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அவதானம்..! அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
2026 ஆம் ஆண்டில் இதுவரை 25,082 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
பெரும்பாலான நோயாளிகள் கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுர, களுத்துறை மாவட்டங்கள் மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகிய பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ளதாக அப்பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரஷில சமரவீர சுட்டிக்காட்டுகிறார்.
உடனடியாக மருத்துவரை நாடவும்
மேலும், டெங்கு காய்ச்சலால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே ஒருவருக்கு 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் அல்லது அறிகுறிகள் இருந்தால், அது டெங்கு தானா என்பதை உறுதிப்படுத்த உடனடியாக வைத்தியரை நாட வேண்டும்.
வைத்தியரை அணுகும் வரை காய்ச்சலுக்கு பரசிட்டமால் தவிர வேறு எந்த மருந்தையும் பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நுளம்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அறிவுறுத்தல்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் மக்களை வலியுறுத்தினாயுள்ளார்.
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri