உடனடி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என சஜித் வலியுறுத்தல் - செய்திகளின் தொகுப்பு
காலிமுகத்திடல் போராட்ட இயக்கத்தின் முன்னணியில் இருந்த சமூக ஆர்வலரான பியத் நிகேஷலவிற்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் இன்றைய தினம் (11.05.2023) கருத்து தெரிவிக்கும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடுவளையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்னவால், பியத் நிகேஷல தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் அவர் இதன்போது கேள்வி எழுப்புள்ளார்.
மேலும், பியத் நிகேஷலவுக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், தாக்குதலில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,