புதிய ஜனாதிபதியை சந்திப்பதற்காக இலங்கை வரும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர் புதிய பணியாளர் மட்ட உடன்படிக்கைக்கான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கும் தற்போதைய வேலைத்திட்டத்தை மீளாய்வு செய்வதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று இலங்கைக்கு பயணிக்கவுள்ளது.
அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியைச் சந்தித்து, தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் நிர்வாகம் முன்மொழிய விரும்பும் மாற்றங்கள் குறித்து விவாதிப்பார்கள் என்று நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை
இந்தநிலையில் அவர்களின் முக்கிய கவலைகளில் ஒன்று நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையாகும் என்று அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் முடிவதற்கும் பொதுத் தேர்தலுக்கும் இடையிலான இடைக்காலம் குறித்து அவர்களுக்கு சில கவலைகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
