இலங்கையின் பிணை எடுப்பு தொடர்பான முதல் மதிப்பாய்வு தொடர்பில் வெளியான தகவல்
கடனளிக்கும் நாடுகளுடன் இலங்கை ஏற்படுத்திக்கொண்ட கொள்கை ரீதியான உடன்படிக்கையை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளது.
இது, இலங்கையின் பிணை எடுப்பு தொடர்பான முதல் மதிப்பாய்வை அடுத்த மாதத்தில் பரிசீலிக்கும் வழியை ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஏற்றுமதி, இறக்குமதி வங்கியுடன் சுமார் 4.2 பில்லியன் டொலர் தொடர்பில் இலங்கை ஏற்கனவே உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டது.
இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி
இந்த நிலையில் ஒரு மாதத்திற்குப் பிறகு பாரிஸ் க்ளப்பின் இணை தலைமை நாடுகளின் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த உடன்படிக்கைகள், இலங்கையின் நான்கு வருட விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை பரிசீலிக்க வழி வகுக்கும் என்று நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுத் தலைவர் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் நடுப்பகுதிக்குள் நிர்வாக சபை, இந்த மதிப்பாய்வை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துவாரகா விடயத்தில் புலம் பெயர் மூன்று அமைப்புகளும் மௌனம்! குழப்பத்தில் மக்கள்: பகிரங்க குற்றச்சாட்டு





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
