சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு இலங்கை விஜயம்
சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அந்த நிதியத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கொசாக் தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த குழுவினர் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தர உள்ளனர்.
அண்மையில் ஏற்பட்ட 'திட்வா' புயலினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்யவும், விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கொள்கை விடயங்கள் குறித்து கலந்துரையாடவும் இந்த தூதுக்குழு நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டித்வா சூறாவளி
இதேவேளை, மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து நாட்டைத் திறம்பட ஆட்சி செய்வீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் தெரிவித்தார்.

மேலும், ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித நிவாரணம் வழங்குவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து அவர் வழங்கிய பங்களிப்புக்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri