"கடன் வசதியை பெற்றுக்கொள்ள 40 அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்த வேண்டும்"
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வசதியை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் 40 அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அதற்கு எதிர்க்கட்சி ஒத்துழைப்பை வழங்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
உதவிகளை பெற கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியை பெற வேண்டுமாயின் கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என ஜனாதிபதி கூறியதாகவும் கிரியெல்ல கூறியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாற்றில் என்றுமில்லாத அளவிலான பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகிறது.
அத்துடன் நாட்டுக்கு கிடைத்து வருமான வழிகள் பாதித்துள்ளன. சுற்றுலாத்துறை, ஆடை ஏற்றுமதி துறை உட்பட பல தொழில் துறைகள் பொருளாதார நெருக்கடியால் பாதிப்படைந்துள்ளன.
பிரான்ஸ் அருங்காட்சியக திருட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேன்., விளம்பரம் செய்த ஜேர்மன் நிறுவனம் News Lankasri
பைசன் படத்தில் நடிப்பதற்காக துருவ் விக்ரம் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam