இலங்கை கோரியுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர் - பரிசீலிக்கும் IMF
இலங்கையில் 'டிட்வா' (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகரமான தாக்கத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச நாணய நிதியம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது.
அத்துடன், அதன் விரைவு நிதியளிப்பு கருவியின் (RFI) கீழ் இலங்கை கோரியுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கான கோரிக்கையை தற்போது பரிசீலித்து வருவதாக, இலங்கைக்கான பணிக்குழுத் தலைவர் ஈவான் பாபஜோர்ஜியோ தெரிவித்துள்ளார்.
நிதியுதவிக் கோரிக்கை
இலங்கை அதிகாரிகள் கோரியுள்ள இந்த சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக் கோரிக்கை, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையின் அங்கீகாரத்தைப் பொறுத்தே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சவாலான காலகட்டத்தில் சர்வதேச நாணய நிதியம், இலங்கை அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்படுவதாகவும், நாடு அவசரமாக மீண்டு, புனரமைத்து, எதிர்காலத்திற்கான மீள்திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ளதாகவும் ஆவான் பாபஜோர்ஜியோ மேலும் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri