மரம் நடுகை திட்டத்திற்கென வழங்கப்பட்ட காணியில் சட்டவிரோத கனிய மணல் அகழ்வு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் இயற்கை சமநிலையை பேணுவதற்க்கான நிரந்தர மரநடுகை திட்டம் எனும் பெயரில் 2017 காலப்பகுதியில் சுமார் பத்து ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்ட. மரம் நடுகை திட்ட காணியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வுகள் இரவிரவாக இடம் பெற்றுவருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான தகவல்களை தாம் வெளிப்படையாக தெரிவித்தால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் தகவல்களை வெளியிடுவதற்கு அச்சமடைகின்றனர்.
இரகசிய தகவல்கள்
எனினும் தமது சுற்றுச்சூழல் பாதிப்படைந்துகொண்டிருப்பதாக இரகசிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இயற்கை சமநிலையை பேணுவதற்க்கான நிரந்தர மரநடுகை திட்டத்தை செயற்படுத்துவதற்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகமே காணியை வழங்கியதாகவும் இதனால் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.







