சட்ட விரோதமாக இந்தியா செல்ல முயன்ற 5 பேர் கைது (Photo)
தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமாக இந்தியா செல்ல முயன்ற 5 பேரை கடற்படையினர் கைது செய்து நேற்று (18.12.2022) தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவர்கள் பேசாலை, வவுனியா மற்றும் திருகோணமலை பகுதிகளைச் சேர்ந்த 3 ஆண்களும் 2 பெண்களும் என
விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
குறித்த 5 பேரும் விசாரணைகளின் பின்னர் நேற்று (18.12.2022) தலைமன்னார் பொலிஸாரினால் மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சிறுவர் காப்பகத்தில்
இதன் போது 18 வயதிற்கு மேற்பட்ட 4 பேரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு 16 வயது சிறுமியை சிறுவர்
நன்னடத்தை உத்தியோகத்தர் ஊடாக சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு நீதவான்
உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
