ஜனாதிபதியின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டால் பேராட்டம் வெடிக்கும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஜனாதிபதியின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்களின் ஆணையின்றி ஆட்சியில் நீடிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்தால் வீதியில் இறங்கி போராட்டம் நடாத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் அமைப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணைக்கு அனைத்து அரசியல்வாதிகளும் அடிபணிந்து செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பெருந்தொற்று நிலைமையோ அல்லது வேறும் காரணிகளுக்காகவோ அதிகாரத்தை நீடித்துக்கொள்ள அனுமதிக்கப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சிக் காலத்தை நீடிக்க வேண்டுமெனால் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதேச்சாதிகார முறையில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப்படாது என அவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan