மோசடி வாக்கு அளித்தால் விதிக்கப்படும் தண்டனை குறித்து எச்சரிக்கை
கள்ள வாக்கு அளித்தால் ஓராண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மோசடியான முறையில் வாக்களித்தால் அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோசடியில் ஈடுபடுவோருக்கான அபராதத் தொகை இரண்டு லட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஓராண்டு காலம் சிறைத்தண்டனை
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஓராண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு 23ம் இலக்க தேர்தல் விசேட சட்டத்தின் பிரகாரம் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடியான முறையில் வாக்களிப்பவருக்கு முன்னதாக அபராதமாக ஐயாயிரம் ரூபா மட்டுமே விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam
