ஒமிக்ரோன் தாண்டவமாடினால் பொருளாதாரம் மேலும் பாதிப்படையும்! - ரணில் எச்சரிக்கை
இலங்கையின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கு அரசு ஒமிக்ரோனைக் கட்டுப்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"ஒமிக்ரோன் வேகமாகப் பரவுகின்றது. மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களால் தொழில் புரியவோ அல்லது பொருளாதாரத்துக்குப் பங்களிப்பு வழங்கவோ முடியாது.
பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியைச் சந்திப்பதைத் தடுப்பதற்காக அரசு ஒமிக்ரோனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காகக் கடுமையாகப் பாடுபட்டனர்.
ஆனால், ஐரோப்பா ஒமிக்ரோனால் என்ன பாடுபடுகின்றது என்பதை நாங்கள் பார்க்க வேண்டும்.
ஐரோப்பாவில் 50 வீதமானவர்கள் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் தொழில்புரிய முடியாத நிலை காணப்படுகின்றது. ஒமிக்ரோன் வேகமாகப் பரவக்கூடியது.
ஆனால், உயிரிழப்புகள் குறைவு. ஒருவர்
பாதிக்கப்பட்டால் அவரால் வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் பொருளாதாரம்
பாதிக்கப்படும்.
புதிய வைரஸ் குறித்தும் நடைமுறையில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும்
பொதுமக்களுக்கு அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri