உலகக் கிண்ண இறுதிப் போட்டி: திடீரென மைதானத்திற்குள் ஓடிய பாலஸ்தீன ஆதரவாளரால் சர்ச்சை
உலகக் கிண்ண இறுதிப் போட்டி நடைபெறும் நரேந்திர மோடி மைதானத்தில் பாகாப்பை மீறி ஆடுகளத்திற்குள் நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போட்டியின் இடையில், பாலஸ்தீன ஆதரவாளர் ஒருவர் திடீரென மைதானத்திற்குள் உள் நுழைந்துள்ளார்.
தடைப்பட்ட போட்டி
இதன்காரணமாக போட்டி சற்று நேரம் தடைப்பட்டிருந்தது.
மைதானத்திற்குள் உள்நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளர், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கு அருகில் சென்ற நிலையில், உடனடியாக செயற்பட்ட பாதுகாப்பு பிரிவினர் அந்த நபரை மைதானத்தில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
அதன் பின்னர் குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |