“சர்வதேச பெண்கள் கிரிக்கெட் அணியில் நான் விளையாடுவேன்” ! நம்பிக்கை வெளியிட்டுள்ள மாணவி (Video)
”சர்வதேச பெண்கள் கிரிக்கெட் அணியில் நான் விளையாடுவேன்” என இலங்கை பெண்கள் உத்தேச அணிக்கு தெரிவான சென். திரேசா மகளிர் கல்லூரி மாணவியான சதாசிவம் கலையரசி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது ஆளுமை மற்றும் எதிர்காலம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எனது பெயர் சதாசிவம் கலையரசி. நான் சென். திரேசா மகளிர் கல்லூரியில் கல்விகற்கிறேன். எனக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் வர எனது அப்பாவே காரணம்.
அவர் ஒரு கிரிக்கெட் பிரியர். அவருடன் சேந்து நானும் கிரிக்கெட் பார்ப்பதுண்டு. பின்பு பாடசாலையூடாக கிரிக்கெட் பயிற்சி பெற்று தற்போது இலங்கை பெண்கள் உத்தேச அணிக்குத் தெரிவாகியுள்ளேன்.
அத்துடன்
”சர்வதேச பெண்கள் கிரிக்கெட் அணியில் நான் விளையாடுவேன்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.