ஜே.வி.பி.யின் நாட்டை அழிக்கும் செயற்திட்டங்களுக்கு இடமளிக்க முடியாது:லொஹான் ரத்வத்த
நான் உயிருடன் இருக்கும் வரையில் அனுரகுமார திஸாநாயக்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்க அனுமதிக்கமாட்டேன் என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி.யின் நாட்டை அழிக்கும் செயற்திட்டங்களுக்கு இடமளிக்கப்பட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் ஆதரவு
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியினதும் மகிந்த ராஜபக்சவினதும் ஆசீர்வாதம் இன்றி இந்த நாட்டில் எவராலும் ஜனாதிபதியாக முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சஜித் பிரேமதாச பற்றி பேச வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் ஐந்து சதத்திற்கு பெறுமதியற்றவர் எனவும் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அனுமதியுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மேடையில் இணைந்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்வரியை அசிங்கமாக பேசிய அன்புக்கரசி, கழுத்தை பிடித்த தர்ஷினி.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam