8 பேருக்கு தடுப்பூசியை பெற்றுக்கொடுத்தேன் - ராஜித சேனாரத்ன
தனக்கு நெருக்கமான 8 பேருக்கு கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தான் உதவியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வறியவர்கள், செல்வந்தர்கள் என்ற பேதமின்றி தற்போது கோவிட் பரவி வருகிறது.
எனக்கு நெருக்கமானவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள உதவி கோரினர்.
அந்த உதவியை நான் செய்தேன். ஒரு மனிதனாவது உயிர் தப்புவான். நான் 8 பேருக்கு தடுப்பூசியை பெற்றுக்கொடுத்தேன் என ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.