சொந்த நாட்டிலேயே நிறவெறி - இந்திய கிரிக்கட் வீரர் ஒருவரின் அதிருப்தி தகவல்
சொந்த நாட்டிலேயே நிறவெறி பாகுபாட்டினால், தான் ”கேலிக்கும் கிண்டலுக்கும்” ஆளானதாக இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் இடதுமுறை சுழல் பந்து வீச்சாளர் எல்.சிவராம கிருஷ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமது டுவிட்டில் இது தொடர்பில் தகவல் அளித்துள்ள சிவராமகிருஸ்ணன், நிறம் காரணமாக தாம் விமர்சிக்கப்பட்டதாகவும், நிறப் பாகுபாடு காட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்
இது துரதிஷ்டவசமாக இந்தியாவிலும் நடப்பதாக சிவராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்
அமொிக்காவில் ஜோர்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதை அடுத்து, இனவெறிக்கு எதிராக, சர்வதேச கிரிக்கட்டின் முன்னணி மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்களான டேரன் சமி மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் செயற்பட்டனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் அண்மையில் நடைபெற்ற 20க்கு20 உலகக்கிண்ணப் போட்டியில் கூட, அனைத்து அணிகளின் வீரர்களும் இனவெறிக்கு எதிராக முழங்காலிட்டு உறுதி எடுத்துக்கொண்டனர்.
இந்தநிலையிலேயே தாம், சொந்த நாட்டிலேயே நிறவெறி பாகுபாட்டினால், தான் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானதாக சிவராமகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்திய அணிக்காக ஆரம்ப வீரராக ஆடிய அபினவ் முகுந்தும், தாம் நிறவெறிக்கு உட்பட்டதாக தெரிவித்திருந்தார்.
தென் ஆப்பிரிக்க அணியில் கறுப்பின வீரர்களான மகாயா நிடினி, போல் ஆடம்ஸ், ஒஷ்வெல் பிரின்ஸ் உள்ளிட்ட வீரர்களும் தாம் நிறவெறிக்கு உட்பட்டதாக தெரிவித்திருந்தனர்.
”அனைவரும் ஒன்றாக விளையாடுவார்கள், எனினும் அணியினர் பயணிக்கும் பேரூந்தில் ஒன்றாக அமர மாட்டார்கள். ஒன்றாக அமர்ந்து உணவருந்த மாட்டார்கள். என்று நிடினி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam