அநுர அரசுக்கும் பசிலுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பின் மர்மம் : அம்பலப்படுத்தும் ராஜபக்சர்கள்
சமகால அரசாங்கம் முன்னாள் ஆட்சியாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் அரசுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
பசில் ராஜபக்ச எனது உறவுக்காரர் என்ற போதிலும் தற்போதைய அநுர அரசாங்கத்தில் உள்ளவர்களே அவருடன் மிகவும் நெருக்கமாகச் செயற்படுகின்றனர். அநுரவின் தோழர்களே அவரது நெருங்கிய நண்பர்களாகும்.
அரசுடன் நெருங்கிய தொடர்பில் பசில்
2005ஆம் ஆண்டு முதல் இந்த அரசாங்கத்தில் உள்ள தலைவர்கள், என்னை விடவும் பசில் ராஜபக்சவுடன் மிகவும் நெருங்கிப் பழகியுள்ளனர். அவர் எப்போது நாட்டுக்கு வருவார் என்பது குறித்து என்னிடம் கேட்காமல் அவர்களிடமே கேட்பது மிகவும் பொருத்தமானது.

அரசாங்கத் தரப்பினர் தினமும் மாலையில் அவருக்குப் அழைப்பு எடுத்து நாட்டின் நிலைமை குறித்து கலந்துரையாடுகின்றனர். எனவே, அவ்வாறு தொடர்ச்சியாக தொலைபேசியில் பேசும் நேரத்தில், பசில் எப்போது இலங்கைக்கு வருவார் என்பதை அவர்களே கேட்டுக்கொள்ள முடியும்.
பசில் ராஜபக்ச உட்பட எவரும் சட்டத்திலிருந்து தப்பியோடவில்லை. பசில் ராஜபக்ச தற்போது வெளிநாட்டில் இருந்தாலும், அவரது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் முறையாக தகவல் முன்வைக்கப்பட்டு, தேவையான சட்டப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு வருகின்றது.
சமகால அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர் தன்னை விடவும் பசில் ராஜபக்சவை நன்றாக அறிவார்கள். சில வேளைகளில் அவர்களின் அறிவுரைக்கு அமையவே அவர் நாட்டுக்கு வராமல் இருக்கிறாரா என்பது தனக்குத் துல்லியமாக தெரியாது.
தனிப்பட்ட பிரச்சினை
இந்த விடயத்தை அரசாங்க தரப்பினரிடமும் பசில் ராஜபக்சவிடமுமே கேட்க வேண்டும் என்ற போதிலும், நீதிமன்றச் செயல்முறைகளில் அவரது பிரதிநிதித்துவம் சரியாக இடம்பெற்று வருகின்றது.

சமகால ஆட்சியாளர்களுக்கு மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்சர்களுடன் ஒரு தனிப்பட்ட பிரச்சினை இருப்பது போல் தெரிகிறது.
விசேடமாக மே மாதம் பிறக்கும் போது மகிந்த ராஜபக்ச, கோட்டாபய அல்லது வேறு ஏதேனும் ஒரு ராஜபக்சவை நீதிமன்றத்திற்கு அழைக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கின்றனர்.
அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது ஒருபுறம் புலம்பெயர் தமிழர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக என குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் துர்நடத்தை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் மதகுரு..! பொலிசாரின் அறிக்கைக்கு மறுப்பு