ஆர்ப்பாட்டங்களை நடத்தும் உரிமை மக்களுக்கு உள்ளது:அமெரிக்க தூதுவர்
இலங்கையர்களுக்கு அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த உரிமை இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஷூங்க் தெரிவித்துள்ளார்.
இது ஜனநாயகத்திற்கு அவசியமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அமெரிக்க தூதுவர் இதனை தெரிவித்துள்ளார். நான் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறேன்.
மேலும் எதிர்வரும் நாட்களில் அனைத்து தரப்பிலும் கட்டுப்பாடு ஏற்படும் என நம்புகிறேன். அத்துடன் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் எனவும் அமெரிக்க தூதுவர் மேலும் கூறியுள்ளார்.
Sri Lankans have a right to protest peacefully - essential for democratic expression. I am watching the situation closely, and hope the coming days bring restraint from all sides, as well as much needed economic stability and relief for those suffering.
— Ambassador Julie Chung (@USAmbSL) April 2, 2022

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam
