தமிழ்நாட்டில் பெண் பொலிஸ் அதிகாரியை கத்தியால் குத்திய கணவர்
தமிழ்நாடு (Tamil Nadu) காஞ்சிபுரத்தில் பணியில் இருந்த பெண் பொலிஸ் அதிகாரியை அவரது கணவரே கத்தியால் குத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.
சங்கரமடத்திற்கு அருகேயுள்ள தனியார் வங்கி நுழைவு வாயிலில் இந்த சம்பவம் இன்று (17.06.2024) நிகழ்ந்துள்ளது.
சின்னகாஞ்சி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமை பொலிஸ் அதிகாரி டில்லிராணியும், அவரது கணவரும் இன்று பகல் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
மருத்துவமனையில் அனுமதி
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தாம் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு, மனைவி டில்லிராணியின் இடது கையில் குத்திவிட்டு அவரது கணவர் தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து, பொலிஸ் அதிகாரி, டில்லிராணி, உடனடியாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |