மடகாஸ்கரில் பட்சிராய் சூறாவளி: இறந்தவர்களின் எண்ணிக்கை 120ஆக உயர்வு
மடகாஸ்கரில் பட்சிராய் சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை இந்த வாரத் தொடக்கத்தில் 92 ஆக இருந்த நிலையில் நேற்று வரை 120 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில பேரிடர் நிவாரண நிறுவனம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் 87 பேர் தென்கிழக்கு மடகாஸ்கரில் உள்ள இகோங்கோ மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என பேரிடர் நிவாரண நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த புயலால் வீதிகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முடங்கியதுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய புதுப்பிப்பு வெள்ளிக்கிழமை முன்பு அறிவிக்கப்பட்ட 111 இறப்பு எண்ணிக்கையை உயர்த்துகிறது.
இந்த சூறாவளியால் 124,000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சுமார் 30,000 பேர் இடம்பெயர்ந்து 108 இடங்களில் முகாமிட்டு தங்கவைக்கப்பட்டுள்ளதாகக் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய 30 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்த தீவின் தெற்கு பகுதியில் உணவுப் பற்றாக்குறையுடன் மக்கள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.